Planet TCEbeta

May 15, 2012

Mangaiyarkarasi - 2009

Image

Hi Friends,

       Before getting into the post , let’s see who are the monks?. Are they are simply God-men or God .
Though there are many flavors of religion to  name and worship ‘their” God or Gods ,The ultimate thing is “Single” .
Monk ~ a solitary man whose influence over the world is drastic.Only the true monks did justice to their role such as preaching religious asceticism and detachment from physical things  ,while others are misused their power and name over politics.

In real the name ‘Monk’ is misleading . Many are deeply involved in the world around them as teachers, social workers, mission.
The monks possess the one of the main leadership quality “THE CHARISMA”. They can make their followers as puppets .These puppets started to believe the monk as their GOD.It would influence their daily life activities in both positive and negative ways.It depends upon “the Monks” intention and thoughts over their life.What if that puppet is a leader? . How do they  affect their followers,the politics,nation ?
Whether the followers of the leaders would obey the leader’s leader ? The answer is “no” .

Usually the monks enter the leader’s life as healers or mentors,later they are dominated by their so called mystic /religious powers. What-so-ever their influences are definitely a slow poison to the society.

      Most of the monks wanted to preach their religion with the help of political power .Mostly they are against science and inventions. They used the “power” to imprison or kill such persons ,in the name of almighty. It is common in any religion.So far Christianity,  Islam, Saivism, vaishnavism, buddhism.They used the God and the mystic powers to attract the kings and in return King return back his power to them.

Let’s see the most influential monks in the world history and their impact on the society.People always need a leader @any form ,the leader again need a monk/mentor/priest to led him ! But the followers should not obey their leaders blindly.It is the moral of this post :P

An article about Rasputin,a russian “Mad monk” made me to write this post.So I start with the mad monk!!!

Grigori Rasputin (men who lived n last century)

   Alexei Nikolaevich (Russian: Алексе́й Никола́евич) (12 August 1904–17 July 1918) of the House of Romanov, was the Tsesarevich and heir apparent to the throne of the Russian Empire. He was the youngest child and the only son of Emperor Nicholas II and Empress Alexandra Feodorovna.Born with haemophilia, his mother’s reliance on the starets Grigori Rasputin to treat the disease helped bring about the end of the Romanov dynasty.Skeptics have claimed that he did so by hypnosis to heal hemophilia.
Rasputin had a considerable personal and political influence on Alexandra,[12] and the Tsar and Tsarina considered him a man of God and a religious prophet. Alexandra came to believe that God spoke to herthrough Rasputin. http://www.oddee.com/_media/imgs/articles2/a96861_a531_5-rasputin.jpgOf course, this relationship can also be viewed in the context of the very strong, traditional, age-old bond between the Russian Orthodox Church and the Russian leadership. Another important factor was probably the Tsarina’s German-Protestant origin: she was definitely highly fascinated by her new Orthodox outlook — the Orthodox religion puts a great deal of faith in the healing powers of prayer.
His influence over the ladies of upper-class  and in appointing the officials were beyond the Monk’s limit.
Gradually he had gained enemies because of his behaviors,talks and influence .  Finally the kingmaker was killed and his death is an example for “the death should not be”.

Now its the time to look back at our Indian history….

Gyana sambandar

   During 5-7th century Buddism and jainism were popular in India.The king Koon pandiyan  had Boil disease and fever . Jains couldn’t cure. His wife who was influenced by Sambandar and saivism asked him to cure his husband’s disease.Image
He cured it with the hymns and Saivism holy things. In turn Sambandar asked him to kill the Jain Priests.How cruel that was ?. Actually monks “used” their mystic  or medical remedies to preach the religion ,not only his religion ,but wanted to destroy other religions.

Now  we can understand ,their “true”understanding and madness about their”GOD”. Shocked to know about ‘Tirukadaikkappu’ fame “Sambandar” . There are many others like them .We actually believe in them  i.e., we were  taught like that ! .See u with the snap of other monk’s history in the following post

To Be Continued…..

References:

http://en.wikipedia.org/wiki/Sambandar

http://www.teachinghearts.org/dre04historynotes.html


by мαηgαιMano at May 15, 2012 11:33 AM

May 07, 2012

Subramani - 2007

rsubramani

நேற்று மதுரையிலிருந்து மைசூர் எக்ஸ்பிரஸில் பெங்களூருக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். நெரிசல் அதிகமாக இருந்ததால், நேராக அப்பர் பெர்த்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். 10:30 வரை வாசிக்கலாம் என்று திட்டம். 9 மணிக்கெல்லாம் ஒவ்வொருவராக உறங்குவதற்கு தயாராகினார்கள். எதிரே அப்பர் பெர்த்தில் இரண்டு சிறுவர்கள்; லோயர் பெர்த்தில் அவர்களது அம்மாவும், இன்னொரு சிறுமியும். பெர்த்துகளுக்கான இடைவெளியில் வேட்டியை விரித்து, அதில் படுத்துக் கொண்டார் அவர்களது அப்பா. அந்த அம்மா சொன்ன ‘அட்ஜஸ்ட்மென்ட்டின்’ அர்த்தம் (2/5) இப்போது புரிந்தது. எல்லோரும் படுத்து விட்டார்கள். ஒரே ஒரு மின்விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. ஒரு வழியாக நான் 9:45-க்கு எனது வாசிப்புத் திட்டத்தை தளர்த்திக் கொண்டு, மிடில் பெர்த்தில் இருந்தவரிடம் ‘அண்ணே, லைட்ட நீங்க ஆஃப் பண்ணிக்கலாம்’ என்றேன். ‘ட்ரை பண்ணி பார்த்துட்டோம். அது ஆஃப் ஆக மாட்டீங்குது’ என்று சொல்லி விட்டு கண்களை மூடிக் கொண்டார் அவர். நான் வாங்கிய பல்பைப் பார்த்து, வெண்பற்களைக் காட்டி இளித்துக் கொண்டிருந்தது அந்த மின்விளக்கு.


by rsubramani at May 07, 2012 02:24 AM

May 05, 2012

Senthil Kumaran S - 2007

senthilkumaran

He woke up and stretched his legs trying to get rid of the laziness of the early morning. The city was still asleep. Not everybody get to enjoy the silent morning that will soon be ruined by the vehicles. Looking at the path, he waited for what has become the most important time of his day. Atlast Siri arrived looking happy as usual with Mr. Raj. She walked past, barely noticing him just like any other day and Mr. Raj as usual gave a look of hatred.  Siri, has been his crush for the past two years, apparently lean, deceivingly calm and incessantly beautiful. She has a silky hair and seems to be a little proud about and keeping tossing it every now and then. Ooops!!! masala, tangential to the primary story which is supposed to be just about men. Bruno was on the other side noticed Mr. Raj and Siri, and growled out of fear. Mr. Raj was prepared. He hurled the stones in hand like missiles targeted at enemy. Bruno vanished out of sight, with a wail, think he got hit. Mr. Raj glowed with happiness. It is for this reason, he hates men like Mr. Raj. Like Bruno, he was an Indian mongrel, born on the streets but now under the shelter of humans. Most of the times it is the kids who give names to the dogs on streets, and that is how Bruno got the name, Bruno.

Mr. Raj loves dogs. But to him Mongrels don’t come under that category. His love for dogs comes with **conditions apply. Just like any local products, mongrels not preferred by most of the local people :-) They are loyal, adorable, possess all qualities of dog and come for free.  Probably somebody should attach a price tag to them to make them valuable to men. Not that he wants men to take them  home and feed them, the best thing the humans can do is at least not bother the poor street dogs A doctor nearby tests his air gun every now and then by firing at the mongrels in streets. He usually gets disturbed when he hears the wailing sound of the dogs running after getting hit. Irony is that the doctor  too owns a dog and claims to love dogs. Mr. Raj and the doctor would discuss about dogs for hours, about different breeds, their rates and what they are planning to buy next. They do love mongrels, but the expectation is not to bark at their dogs by any chance, and to submit themselves and let the men and their pets do whatever they want.

The life of Indian mongrels is one of the toughest to endure. At times born on the sides of the road, the initial days depend mostly on luck. Mistakes are fatal. The curiosity to explore the world ends under the tyres of two wheeler or four wheeler. Men seem to have evolved a very complex process to survive and these vehicles help them a lot in running behind too many things that they consider important, which he cannot comprehend. Though the ultimate purpose might be just like him, to live and sustain their species, their process process is simply complex.  Most of the time, it would directly or indirectly affect nature and make men look like weapons of mass destruction. Co-existence is unknown to men. Men have made so many species extinct. Funny part is the campaign which they start at the end to save them. Most of the time they are not sure whether they want to kill or whether they want to save. Anyway, the most powerful species does whatever it wants.

Though the dogs have managed to live with men, still life of mongrels in street is a big challenge. The daily hunt for food, escaping the vehicles, tackling the different moods of men is difficult.  At times they run searching for a hiding place, when men come in huge vehicle to catch them,  and get them killed/sterilized. A check by humans to make sure that the dog population stay in control it seems. They could have avoided a lot of problems if they had controlled theirs in first place. Anyway, he is not intelligent enough to understand the ways of men, and he is grateful to god for the same.

Pets at home have the best life. Keep wagging the tail, and live comfortably. There are few owners who spend a huge money and find a powerful mate too ;) Life will be smooth, till they become old. He had seen few people taking their old dogs away and leaving them at remote places to spend their final years. Had always wondered what happens to them, how would they cope at the old age without any idea about the rules of the street. Anyway, Can’t complain, humans do the same to old humans too. Some are very kind, they make sure their pets don’t suffer the old age, and end their life.  So Kind.

His life has been smooth from the day he moved into this family. Struggle has stayed outside his life. But for other mongrels, they continue to be the unappointed guardians of the streets, waging their tails to every human, loyal to the biscuits shared, guarding their home, at times guarding the kennels where their pets are sold, not expecting humans to adopt them and give a luxurious life, but expecting some mercy to let them lead their lives.


by senthilkumaran at May 05, 2012 03:23 PM

May 04, 2012

Anugraha S - 2010

atomhouse

எத்தனை வருடங்கள் ஓடிவிட்டன. ஐந்தாம் வகுப்பிற்கு பின்னர் இப்போது தான் அவளைப் பார்க்கிறேன். ஒரு கணம் நேற்று கொடுத்த வீட்டு பாடம் பற்றி கூட பேச முடியும் போல இருந்தது. இன்று என்ன சாப்பாடு எடுத்து வந்திருக்கிறாய் என்றும் கேட்டிருக்கலாம். ஆனால், அவள் மிகவும் மாறியிருந்தாள். ஒட்டி வெட்டிய முடியும் சிரித்த முகமுமாக.கார்த்திகா என்ற தன் பெயரைக் கூட வேறு மாதிரி, நவீனமாக மாற்றியிருந்தாள். அங்கு வேறு ஒரு பள்ளித் தோழியுடன் பேசிக்கொண்டிருந்தாள். இன்னும் என்னை கவனிக்கவில்லை போல இருந்தது. எனக்கு மெதுவாக பதட்டம் கூட தொடங்கியது. சந்தித்து, கை குலுக்கி சிரித்துவிட்டு சென்றுவிடலாம். ஆனால், மெதுவாக பதுங்கி தயங்கி கொண்டே இருந்தேன்.

நானும் அவளும் பள்ளி சேர்ந்ததிலிருந்து ஒரே வகுப்பில் தான் படித்தோம். என்னுடைய எல்.கே.ஜி. வகுப்பு புகைப் படத்தில் ‘பாய் கட்டு’டன் விரைப்பாக, தலை மட்டும் சற்றே சாய்ந்தவாறு காமிராவை முறைத்துக் கொண்டிருக்கும் மிக தீவிரமான பார்வையுடன் இருப்பாள். என் வகுப்பிலேயே காலர் பொத்தான் போட்டிருக்கும் ஒரே மாணவி அவள் தான். சற்றே மஞ்சள் பூசிய முகம்.கண்களிலும் புருவங்களிலும் அழுத்தமாக வரையப் பட்ட மை. சதுரமாக மடிக்கப்பட்ட கைகுட்டை அவள் பினோஃபார்மில் நேர்த்தியாக குத்தப் பட்டிருக்கும். எங்கள் பள்ளியும் கல்லூரியும் ஒரே காம்பவுண்டில் தான் இருக்கும். அதாவது, கல்லூரி அலுவலகம் எங்கள் விளையாட்டு மைதானத்தை ஒட்டியே இருக்கும். அங்குதான் அவளது அம்மா பேராசிரியராக இருந்தார். நல்ல நிமிர்ந்த நடையும், தங்க நிற விளிம்புடன் கண்ணாடியும், நன்கு அழுத்தப்பட்ட காட்டன் புடவையும், வட்டமான கரிய முகத்தில் நல்ல பெரிய பொட்டுடன் கழுத்தில் தங்க சங்கலியுடன், சிரித்துக் கொண்டே வருவார்.அவருக்கு வகுப்பு இல்லாத வேளைகளில், கார்த்திகாவைப் பார்க்க எங்கள் வகுப்பிற்கு வருவார். என்னையும் அழைத்து காண்டீனுக்கு கூட்டி செல்வார். அங்கு எங்களுக்கு முக்கோண கிரீம் ‘பன்’ வாங்கி தருவார். ஒரு பக்கம் மஞ்சள் நிற கிரீமும், இன்னொரு பக்கம் பிங்க் நிற கிரீமும் தடவிய அந்த ‘பன்’ தான் எங்கள் காண்டினிலேயே மிகவும் விசேஷமானத் தீனி.என்னிடம், என் அம்மாவைப் பற்றி விசாரிப்பாள். என்னுடைய அம்மாவும் எங்கள் பள்ளியிலேயே ஆசிரியையாக இருந்தாள். கார்த்திகாவின் அம்மாவிற்கு எங்கள் பள்ளி ஆசிரியைகள் பலரையும் தெரியும்.எல்லோரும் அவரைப் பார்த்தால் புன்னகைத்து தலையசைத்துச் செல்வார்கள்.

கார்த்திகா வந்த புதிதில் சற்று சோகமான பெண்ணாகவே காணப்பட்டாள். அவளும் எங்கள் நண்பர் குழுவின் நிரந்தர உறுப்பினர் என்றாலும், அவ்வப்போது பெரிய விடுப்புகள் எடுத்து சென்று விடுவதால், நாங்கள் அதிகம் பேசிக்கொண்டிருக்கவில்லை. எங்கள் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தனி வரிசையாக மைதானத்திற்கு அந்த பக்கம் இருக்கும்.பெரிய வகுப்புகள் எல்லாம் மைதனத்திற்கு இந்த பக்கம். இரண்டிற்கும் நடுவில், இரண்டிற்கும் செங்குத்தான திசையில் ப்ரீ கே.ஜி வகுப்புகள். அங்கிருந்து ஒரு மைதானம் கடந்தால் ஒன்றாம் வகுப்பு வரிசைகள். எனவே, ஒரு வகுப்பு தாண்டி அடுத்த வகுப்பு செல்வதென்பது, அந்த தூரத்தினாலேயே அளக்கப் பட்டது. நான் அடுத்த வருடம் அதுவரை சென்று விடுவேன் என்பது போன்ற ஒரு கனவை அது தந்தது. ஒரு புதிய இலக்கை ஏற்ற பெருமிதத்துடன் புதிய புத்தக பையும் கையுமாக அதுவரை ஓடி செல்வோம். தினமும் ஒரு முறையாவது, மைதனத்தில் விழுந்து முட்டி சிராய்த்து வீடு திரும்ப வேண்டும். மறு நாள், வகுப்பில் சென்று அவரவர் விழுப்புண்களைக் காட்டி யாருடையது பெரிது என்று விவாதித்துக் கொள்வோம். ஒன்றிற்கு மேற்பட்ட தழும்புகள், இல்லை ஒற்றை பெரிய தழும்பு, தழும்பிற்கு காரணமான வீர சாகசம் முதலியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப் படும். விவாதத்தின் இறுதியில், எல்லாருடைய பரிதாபமும் குவியும் ஒருவர், அந்த விவாதத்தில் ஜெயித்ததாக உணர்த்தபடும். நான் ஹீட்டரில் பெற்று கொண்ட சுடு தழும்பு கையிலும், புதிய வண்டியிலிருந்து விழுந்து கட்டை விரல் முறித்துக் கொண்ட தழும்பு காலிலும், கட்டிலிலிருந்து குதித்து கதவில் தலையால் இடித்து கொண்டு பெற்ற தையல் தழும்பு தலையிலுமாக, வீழ்த்த முடியாத இடத்தில் இருந்த போது தான் கார்த்திகா நுழைந்திருந்தாள். மெதுவாக எங்களிடம் பேச தொடங்கியிருந்தாள். முதல் டேர்ம் பரீட்ஷைக்கு அவள் வந்திருக்கவில்லை. தான் டாக்டரைப் பார்க்க சென்றிருந்ததாகவும் தனக்கு நெஞ்சில் ஒரு பெரிய ஆபரேஷன் செய்யப்பட்டிருப்பதாகவும் சொன்னாள். அவள், தன் சட்டையின் காலர் பொத்தானைத் திறந்த போது, அந்த தையலின் தழும்பு கழுத்து வரை இருப்பது தெரிந்தது. அது தன் வயிற்றிலிருந்து கழுத்துவரை இருப்பதாகவும் சொன்னாள். என்னால் நம்பவே முடியவில்லை. இது ஏதோ புதிய சதி போல இருந்தது. அவள் சிறு குழந்தையாக இருந்த போது, அவள் வீட்டு வேலைக்காரி அவளை மாடியிலிருந்து கீழே போட்டுவிட்டாளாம். அவளுக்கு ஒரு வயதில், நெஞ்சை திறந்து ஆபரேஷன் செய்யப்பட்டதாம். அதனால் அவளால் அதிகம் ஓடி விளையாட முடியாது.

எல்லா விஷயங்களிலும் அதற்காக அவளுக்கு சலுகை வழங்கப்பட்டது. அவள் நிறைய பரீட்சைக்கு வந்ததில்லை. வரும் ஒரு சில பரீட்சைகளிலும் தேர்வு பெற்றதில்லை. விளையாட்டு வகுப்புகளிலும், அவள் எங்களுடன் சேர்ந்து மைதானத்தை சுற்றி ஓடி வர தேவையில்லை. எங்கள் வகுப்பை ஒட்டிய வேப்பமரத்தடியில் அமர்ந்து மிஸ்ஸுடன் பேசிக் கொண்டிருப்பாள்.எங்கள் விளையாட்டு டீச்சரை எங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அடிக்கடி பள்ளிக்கு வரும் வெள்ளைப் புடவை அணிந்த பயிற்ச்சி ஆசிரியையகளைப் போலவே ஒவ்வொரு வகுப்பிலும் ஏதேனும் புதிய விளையாட்டுகளை சொல்லித் தருவாள்.எங்கள் எல்லோருடைய பெயர்களும் அவளுக்கு தெரிந்திருக்கும். கிட்டத்தட்ட நாங்கள் எல்லோருமே அவளுக்கு செல்லம் தான். ஆனால், அவள் அந்த வருடத்துடன் அரசு வேலை கிடைத்ததால், எங்கள் பள்ளியை விட்டு சென்று விட்டாள்.

அதற்கு அடுத்த வருடம் தான் அது நிகழ்ந்தது. அதற்குள் எங்கள் நட்பு வட்டம் சற்று சுருங்கி ஸ்திரம்பட ஆரம்பித்திருந்தது. ஏதோ ஒரு சண்டையினால், கார்த்திகா இன்னொரு வட்டத்திற்குள் சேர்ந்துவிட்டாள். அன்று தமிழ் அரையாண்டு பரீட்ஷை. நான் என் பென்சிலை சீவி சீவி, என் மேசை முழுவதும் சுருள் சுருளாக பென்சில் மரம் கிடந்தது. மெதுவாக பென்சில் நுனியை மேசையில் தேய்த்து கூறிய நுனியால் மீண்டும் எழுத துவங்கியிருந்த போது, எப்போதும் முதல் ராங்க் எடுக்கும் இருவரும் பரீட்ஷையை முடித்துவிட்டு, பென்சிலை எழுத்துப் பலகையில் உருட்டியபடி விளையாடிக் கொண்டிருந்தனர். நான் மிகவும் சிரமப்பட்டு மூணு சுழி ‘ணா’ விற்கு எத்தனை சுழி என யோசித்து கைக்கு வந்தவரை சுழித்துவிட்டு, கடைசி பதிலை எழுதி முடித்தேன். அப்போது திரும்பி பார்க்கையில், கார்த்திகாவும் பென்சிலை பலகையில் உருட்டியபடி விளையாடிக் கொண்டிருந்தாள். அந்த பரீட்ஷையில் அவள் பாஸானது மட்டும் அல்லாது, என்னைவிட அதிக மதிப்பெண்களும் பெற்றிருந்தாள்.

அந்த வருடம் தற்செயலாக, எங்கள் பழைய விளையாட்டு டீச்சர் எங்கள் பள்ளிக்கு வந்திருந்தார். எங்கள் வகுப்பு முழுக்க ஓடி சென்று அவரை சூழ்ந்து பேசிக்கோண்டிருந்தோம். கார்த்திக்கா, தான் அந்த முறை பரீட்ஷையில் அதிக மதிப்பெண் பெற்றிருப்பதைப் பற்றி மகிழ்ச்சியாக கூறினாள். அப்போது, அருகில் நின்றிருந்த நான் சட்டென்று, ‘அவ காபி அடிச்சிருப்பா மிஸ்’ எனக் கத்தினேன். எல்லாரும் ஒரு கணம் அமைதியாகி விட்டார்கள். மிஸ், என்னைப் பார்த்து அப்படியெல்லாம் பேசக் கூடாது என்று சொல்லி பேச்சை மாற்றினாள். சட்டென்று எனக்கு மிகுந்த வெட்கம் கூடியது. வீட்டிற்கு போகும்போது நான் அதை மறந்திருந்தேன்.

அன்று இரவு, நான் தூங்க சென்ற நேரம், என் வீட்டு தொலைபேசியில் ஒரு அழைப்பு. அம்மாதான் எடுத்தாள். கார்த்திகாவின் அம்மா. அம்மா மெதுவாக நலம் விசாரிப்பது கேட்டது. பின், ‘அப்படியா? எனக்கு புரிகிறது மேடம். அவள் தெரியாமல் சொல்லியிருப்பாள். எனக்கு தெரியுமே, கார்த்திக்கா எவ்வளவு நல்ல பெண் என்று. உடல் நலம் கொஞ்சம் பாதித்திருந்தாலும், எத்தனை சிறப்பாக பாடங்களை கிரகித்துக் கொள்கிறாள். ஆமாம், கண்டிப்பாக உங்கள் உழைப்பையும் பாராட்டத் தான் வேண்டும். அவளை அழ வேண்டாமென்று சொல்லுங்கள். இனி, அப்படியெல்லாம் பேச மாட்டாள்.” என்று கூறி தொலைபேசியை வைக்கும்வரை, நான் தூங்குவது போலவே நடித்துக்கொண்டிருந்தேன். மறு நாள் அம்மாவும் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. ஒருவேளை மறந்திருக்கலாம். ஆனால், நானே அவளிடம் சென்று, முகத்தை தொங்கவிட்டு, நான் கூறியதை சொன்னேன். அவள் சிரித்துவிட்டு, அப்படி எல்லாம் பேசக் கூடாது என சொன்னாள். அதன் பிறகு நாங்கள் இருவரும் வேறு வேறு செக்ஷங்களில் போடப்பட்டோம். சாதாரணமாகத் தான் பேசிக்கொண்டோம். அவள், மேலும் கலகலப்பான துடிப்பான பெண்ணாக மாறினாள். பள்ளியில் எல்லா நடன நிகழ்ச்சிகளையும் அவள் தான் ஒருங்கிணைப்பாள். விளையாட்டிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டாள். படிப்பிலும் மோசம் இல்லை. எப்போதும் ஒரு நண்பர் கூட்டம் அவளுடன் இருக்கும். எப்போதும் யாரையாவது சீண்டி நகைத்து சமாதான படுத்துவாள்.மனதில் உள்ளதை பட்டென்று சொல்லிவிடுவாள். அது பாராட்டு என்றாலும் சரி, விமரிசனம் என்றாலும் சரி. நாங்கள் ஆறாம் வகுப்பு செல்லும் போது அவள் பள்ளி மாறி சென்று விட்டாள்.

என்னுடன் படித்த பலரும் அவளுடன் தொடர்பில் இருந்தார்கள். இன்று தான் நான் அவளை மீண்டும் சந்திக்கிறேன். அவள் என்னைக் கண்டுகொண்டு விட்டாள். என்னருகில் வந்து என் மேல் ஒரு கையை போட்டு, ‘ எப்படி இருக்க ?’ என்று கேட்டாள். நான் சுதாரித்துக் கொண்டு, புன்னகைத்து அவள் அம்மா எப்படியிருக்கிறாள் என்று கேட்டேன். தான் பள்ளி முடிக்கும் போதே, அவள் அம்மா புற்று நோயால் இறந்துவிட்டதாக கூறினாள். எனக்கு எங்கேயோ வலித்தது. அவளுடைய தழும்பை பற்றி கேட்க வேண்டும் போல இருந்தது. அன்றே அவள் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. அவளுடைய பார்வையில், இப்போதும் ஒரு சிறு கூர்மை இருப்பது போல தோன்றியது.

 


by atomhouse at May 04, 2012 05:18 AM

May 03, 2012

Anugraha S - 2010

atomhouse

பெங்களூரில் இந்த முறை கூடுதல் வெயில் தான். இல்லை ஒவ்வொரு கோடையும் நமக்கு இப்படி ஒரு பிரமை ஏற்படுகிறதோ என்றும் தோன்றுகிறது. எனக்கு இங்கு, இது இரண்டாவது கோடை.முதல் நாள் பெய்த நல்ல மழை முழுவதுமாய் மறைந்து, தெளிவான வெயிலில் துலக்கப்பட்ட பாத்திரம் போல பளிச்சென்று இருந்தது வானம். மதியம் மணி ஒன்றரை. நான் அவசரமாக பேருந்து நிறுத்தத்தை நோக்கி விரைந்தேன்.நல்ல வெயில். பேருந்து எதுவும் வராததால், ஒரு ஆட்டோ எடுத்து சில்க் பொர்ட் சந்திப்பை அடைந்தபோது, எனக்காக சாரதா தன் இரு சக்கர வண்டியும் தலைக்காப்புமாக காத்திருந்தார். பெங்களூர் சாலைகளில், என்னையும் பின்னால் அமர்த்திக்கொண்டு, அவர் இயல்பாக வண்டி ஓட்டுவதைப் பார்த்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. சாரதா, ஒரு தனியார் தன்னார்வக் குழுவுடன் பணியாற்றுகிறார். அங்கு பார்வையற்றோருக்கு, அவர் பிரெயில் மொழி கற்றுத் தருகிறார். அவரே அதை இரண்டு ஆண்டுகள் முன்பு தான் கற்றுக்கொண்டதாக சொன்னார். இப்படி ஒருவருடன் நான் வண்டியில் சென்று கொண்டிருப்பேன் என்று, நான் நினைத்திருக்கவே முடியாது. வேலை செய்யும் இடத்தில், அனேகமாக கன்னடமே காதில் விழாமலே இருக்கக்கூடிய சூழலும் உண்டு தான். நான் சாரதாவை சந்தித்தது என் குழல் வகுப்பில். நான் சேர்ந்து மூன்று மாதங்களுக்குபின் அவர் சேர்ந்தார். நான் குழல் வகுப்பு சேர்ந்தது எனக்கே பெரிய ஆச்சரியம் தான்.

அது மிகவும் அழகிய வீடு. அங்கு வசிக்கும் முதிய தம்பதி, தம் வீட்டின் ஒரு பகுதியை அழகிய கலைப் பட்டறையாக மாற்றியிருந்தார்கள். முதன்முதலில் சென்ற போது வகுப்பை ஒரு ஐந்து நிமிடம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய ஆசிரியை முதலில் சந்தித்தேன்.மெலிந்த உடலும், படிய கட்டிய புடவையும், காதுகளில் மின்னும் வைரத்தோடும், எளிமையான ஒரு புள்ளி சாந்து போட்டும், முதிர்ந்த ஆனால் தளராத கைகளில் ஒற்றை தங்க வளையலுமாக ஒரு முதிர்ந்த பெண்மணி கூறிய கண்களில் சிரிப்புடன் என்னை வரவேற்றார். கொஞ்சம் நரைத்த முடியை சிறு கொண்டையென அணிந்திருந்தார்.அவருக்கு பின், கண்டிப்பாக ஒரு ஒளி வட்டம் சுழன்று கொண்டிருந்தது. இருவர் குழல் வாசித்துக் கொண்டிருந்தனர். என்னைப் பற்றி விசாரித்தார். இன்னும் இரண்டு வருடங்களுக்கு எங்கேயும் செல்லும் திட்டம் இருக்கா எனக் கேட்டார்.குழல், அவ்வளவு சுலபமானது இல்லை என்றும், ஒரு வருடத்தில் ஒரு துளி தான் கற்றுக்கொள்ள முடியும் என்றும் சொல்லி முடிக்கும் போது, உன்னால் முடியாது, போய் வரலாம் என்ற செய்தி என்னிடம் கச்சிதமாக வந்து சேர்ந்தது. நானும் கொஞ்சம் பயந்துதான்விட்டேன். மீண்டும் நான்கு மாதங்கள் கழித்து, அங்கு சென்றேன்.அந்த கலைக்கூடத்தின் பொறுப்பாளருக்கு என்னை நினைவு இருந்ததோடு மீண்டும் முடிவெடுத்து வந்தது பற்றி சந்தோஷப்பட்டார். என் ஆசிரியைக்கு என்னை மீண்டும் அறிமுகம் செய்துகொண்டேன். ஆனால், முதல் வகுப்பு முடியும் போதே, தவறி களத்தில் குதித்துவிட்ட குங்க் ஃபூ பாண்டா போல பதறியபடி தான் வெளியே சென்றேன். இன்னும் கொஞ்சம் வகுப்புகள், முதலில் கொஞ்சம் அளவிற்கு மீறிய தன்னம்பிக்கை இருந்தபோதும், மெல்ல மெல்ல ஒரு பீதி என்னை பிடிக்க தொடங்கியது. ஒன்றைக் கற்றுக்கொளவது என்றால் என்ன என்று கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.மேடம் பெரும்பாலும் கன்னடத்தில் கோவித்துக்கொண்டது ஒரு வகையில் நல்லதாகபட்டாலும், கோபம் எனும் உணர்ச்சி எல்லாம் மொழியிலும் சடாரென புரியத்தான் செய்கிறது. முதலில் சேரும் போது, குழல் விற்கும் சிறுவர்கள் வாசிப்பது போல, நாட்டுபுற மெட்டுக்கள் வாசிக்க தெரிந்தால் போதும் என்ற எண்ணம் தான். முதல் வகுப்பில், அங்கு மாணவர்கள் வாசித்துக்கொண்டிருந்ததும் அப்படித்தான் இருந்தது. ஆனால், மெல்ல மெல்ல தான் புரிந்தது, அந்த துள்ளல் மெட்டுக்குள் இருக்கும் நுணுக்கமான இலக்கணம். எப்படியோ, என்னுடைய ஞான குறைபாடுகளை மீறி, ஒழுக்கம், குறிப்பாக கற்றுக்கொள்வதன் ஒழுக்கம் என்ன என்பதை புரிந்து கொண்டேன். பின், பாண்டாவின் குரு ஷிஃபூவை போல, என் ஆசிரியையும் என் மேல் நம்பிக்கை வைக்க தொடங்கிய பின்னரே, என் பாடம் துவங்கியது.

இரண்டு நாட்கள் முன்னர், என் ஆசிரியை ஏற்பாடு செய்திருந்த சிறிய இசை அரங்கேற்ற நிகழ்ச்சிக்குதான் நானும் சாரதாவும் சென்றுகொண்டிருந்தோம். கிட்டதட்ட பெங்களூரின் விளிம்பில், ஒரு அமைதியான சிற்றூர் போன்ற நகரமைப்பில், ஒரு அமைதியான வீடு. அங்கு வாசலில் ஒருவர் குழலுடன் இருப்பதை பார்த்ததும் அது தான் இடமெனக் கண்டுகொண்டோம். சுட்ட செங்கற்களாலான வீடு. வீடு முழுவதும் ஒரே அறைதான். நடுவில், முற்றத்தை போல குழிவான வரவேற்பிடம். அதில் ஒரு சோஃபா போடப்பட்டிருந்தது. அறையின் இடது ஓரத்தில், சுவர்களற்ற சமையல் அறை. வலது ஓரத்தில், கழிப்பறைகள். முற்றத்தின் ஒரு பக்கத்தில் டி.வி.யும் சோஃபாவும். இன்னொரு பக்கத்தில், வீணைகள் அடுக்கப்பட்டிருந்தன. இன்னொரு பக்கம் வாசல். அதற்கு எதிர் பக்கம், உள்ளிருந்து மேல் மாடிக்கு செல்லும் படிகள்.தரையில் பாய்கள் விரிக்கப்பட்டிருந்தன. பார்வையாளர்களாகிய நாங்கள் ஒரு புறம் அமர, எதிரே வீணைகளுடன் மாணவர்கள் அமர்ந்திருந்தனர். முதலிலேயே இதை ஒரு சங்கீத சந்திப்பு என்று அறிமுகப்படுத்தினார், என் ஆசிரியை. அங்கு இருப்பவர்கள் மாணவர்கள் என்றும். அவர்கள் கவனத்தை திசை திருப்பும் வகையில் யாரும் போட்டோ வீடியோ போன்றவற்றை எடுக்க கூடாதெனவும் அறிவித்தார். என் அருகில் மேடமிடம் வீணைக் கற்றுக்கொள்ளும் சுனிதா அமர்ந்திருந்தார். பெரும்பாலும் வயதானவர்களும், வாசிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களும் சிறிய குழந்தைகளும் வந்திருந்தனர். சுனிதாவிற்கு அருகில், ஒரு பாட்டி தாத்தாவுடன் மூன்று வயது சிறுவன் அடம்பிடித்துக் கொண்டிருந்தான். மின் விசிறி ஸ்விட்சை போடுவதும் அணைப்பதுமாக விளையாடிக்கொண்டிருந்தவனை, பாட்டி திசைதிருப்ப முயலவும், துள்ளி எழுந்து வீல் எனக் கத்தி சங்கீத சந்திப்பை தொடங்கி வைத்தான். முதன்முதலில் பல பேர் முன் வாசிக்க போகும் பதட்டத்தில் இருந்த சுனிதா, சிறுவனை சங்கடமாக திரும்பிப் பார்த்தார். பின், அவன் தாத்தா பாட்டியால் வெளியே அழைத்துசெல்லப் பட்டான். நிகழ்ச்சி முடிந்ததும் தான் தெரிந்தது, அது சுனிதாவின் குழந்தைதான் என்று. ஐந்து மணி நேரம் நடந்த நிகழ்ச்சியில் குழலும் வீணையும் மாறி மாறியும், ஒன்றுடன் ஒன்று சேர்ந்தும் வாசிக்கப் பட்டது. என்னுடன் பயிலும் சீனியர் மாணவர்கள் பதட்டத்துடனிருந்தாலும் இனிமையாக வாசித்தார்கள்.அந்த நிகழ்ச்சியில் ஒரு இனிய ஆச்சரியம் இருக்கபோவதாக மேடம் சொன்னது நினைவிற்கு வந்தது. அங்கு, பார்வையற்ற இருவர், மேடத்தின் மாணாக்கர், மிக மிக அருமையாக வீணை வாசித்தார்கள். அவர்களுள் ஒருவருக்கு அன்று பிறந்த நாளாகவும் இருந்தது.

அறை முழுவதும் மனிதர்களால் நிரம்பியிருந்தது. ஆங்காங்கே, சிறுவர்கள், ஹனுமன் மலைகளையும் குன்றுகளையும் கடப்பது போல, கீழே அமர்ந்திருந்த பெரியவர்களை குதித்து கடந்துசென்று கொண்டிருந்தனர். அந்த குறும்பு சிறுவர்களின் கவனத்தை கட்டுமாறு, மேடம் அவர்களுக்கான ஒரு போட்டியையும் நடத்தினார். எல்லோருக்கும் காகிதமும், பென்சில், கலர் பென்சில்களும் வழங்கப்பட்டன. சங்கீதத்துடன் சம்பதப்பட்ட ஏதேனும் ஒரு சித்திரத்தையோ அல்லது கட்டுரையையோ வடிக்க வேண்டும்.குழந்தைகள் ஆர்வத்துடன் வரைவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.ஒரு போட்டி என்பது இத்தனை இயல்பாக நடக்க வேண்டிய ஒரு விஷயம் எனப் புரிந்தது. அது குழந்தைகளுக்கு நல்ல சவாலாகவும், சுவாரசியமான பொழுதுபோக்காகவும் இருந்தது.நிகழ்ச்சிக்கு இடையே ஒரு சிறிய இடைவெளை விடப்பட்டு, அனைவருக்கும் பானகமும் பொறி உருண்டை பலகாரமும் வழங்கப்பட்டது. பல சந்திப்புகளில் சோடா கலந்த குளிர்பானங்களே உபசரிக்கப் படும் போது, பானகத்தைப் பார்த்ததும் பரவசமாக இருந்தது.

சுற்றிலும் கன்னட வயோதிகர்கள் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக்கொண்டனர். அது ஒரு நெருங்கிய அன்னிய மொழியாக இருந்தது.ஒரு புதிய சமூகத்தினுள் முதன்முறை இயல்பாக நுழைந்திருப்பதை எண்ணி ஆச்சரியமாக இருந்தது. மாலை நெருங்க நெருங்க, ஜன்னலின் கீழ் வரிசையாக அமர்ந்து வாசித்த வீணைகளுடன், ஜன்னல் வழியே தோட்டத்து வாழையும் தலையசைக்க தொடங்கியது.இறுதி நிகழ்வாக, என் ஆசிரியையும் அவரது மூத்த சகோதரிகளும் சேர்ந்து வீணை மீட்டிய போது, மெல்ல காற்று மிருதுவான குளிர்ச்சியுடன் உள்ளே நுழைந்தது.வாழை துள்ளி துள்ளி ஆட, மழை சாரல் தொடங்கியது.


by atomhouse at May 03, 2012 07:03 AM

April 24, 2012

Guruprasad L - 2010

April 17, 2012

Anugraha S - 2010

atomhouse

சமீபத்தில், முகுந்த் நாகராஜனின் ‘அம்மாவின் தோழி‘ என்ற கவிதையை வாசித்தேன். அந்த கவிதையின் தலைப்பைப் படித்ததுமே கவிதை புரிந்துவிட்டது போன்றதொரு பரவசம்.’அம்மாவின் தோழி’ என்றதும் எனக்கும் ஒரே ஒரு மனிதர் தான் நினைவிற்கு வந்தார், என் அம்மாவின் கிட்டதட்ட ஒரே ஒரு தோழியான சாவித்திரி மிஸ். நான் இரண்டாம் வகுப்போ மூன்றாம் வகுப்போ படித்துக்கொண்டிருக்கும் காலத்தில், எங்கள் பள்ளிக்கு புதியதாக வந்த பாட்டு டீச்சர். அம்மாவும் நான் படித்த பள்ளியில் தான் ஆசிரியையாக பணி செய்துகொண்டிருந்தார். பிரகாசமான வெள்ளை முகமும், படிய வாரிய தலையும், கழுத்தில் கருக மணியும், நெற்றியில் திலகம் போன்ற ஸ்டிக்கர் பொட்டும் வைத்திருப்பாள், சாவித்திரி மிஸ். அமைதியான குரலில் பாட்டு சொல்லி தந்தாள். புதிய புதிய பஜனைகள் சொல்லித் தந்தாள். நான் எதிரேபார்த்திராதபடி சில நாட்களில், அம்மாவும் சாவித்திரி மிஸ்ஸும் நண்பர்களானார்கள். 
 
அதுவரை என்னுடைய நட்பு வட்டம் என்பது, சாப்பாட்டு இடைவேளையில், மைதானத்தின் பரந்த மர நிழலில், யாருடைய வட்டத்திற்குள் அமர்ந்திருந்தேன் என்பதை பொறுத்தே இருந்தது. வருடம் தொடங்கும் போது, எப்போதும் வட்டம் பெரியதாக இருக்கும். பின், கொஞ்சம் கொஞ்சமாக அமீபாவை போல குட்டி போடும். பின், அந்த வட்டங்கள் அருகாமையில் கூட அமர்ந்துகொள்ளாதபடி பகை நீளும். சில சமயங்களில், இருவர் மட்டுமேயான வட்டத்திலும் உட்கார்ந்து சாப்பிட்டிருக்கிறேன். பின், மீண்டும் அடுத்த வருடம் ஒரு பெரிய வட்டத்துடன் தொடங்கும். ஆனால் அம்மா, ஆசிரியர் அலுவலகத்தில், தன் இருக்கையில் மட்டுமே அமர்ந்து சாப்பிடுவாள். அருகில் இருப்பவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள்.சாவித்திரி மிஸ் வந்த பின், எப்போதும், அவள் அருகிலேயே அமர்ந்து சாப்பிட்டாள். வீட்டிலும் சாவித்திரி மிஸ் பற்றிய கதைகள் தான். அவள் சங்ககிரியிலிருந்து தினமும் இரண்டு பஸ் மாறி வருகிறாளாம். பெரிய இசைக் குடும்பத்திலிருந்து வந்தவளாம். அவள் அம்மாவும் வயலின் கலைஞராம். எல்லா பேச்சுகளிலும், சாவித்திரி மிஸின் ஓரிரு கருத்துக்கள் எப்படியும் அகப்படும். அதற்கு முன் தன்னுடன் பள்ளியில் படித்த சாரதாவை பற்றி எப்போதாவது கூறுவாள். நானும் சாரதாவும் சேர்ந்து தான் பாட்டு கிளாஸ் போனோம். அவ நல்லா பாடுவா. அவ எட்டங்க் கிளாஸிலே தானே டியூஷன் எடுத்து படிச்சா தெரியுமா? இப்போ பாங்க்-ல பெரிய மானேஜர் ஆயிருப்பா. என்ற கதை சுருக்கத்தை மட்டுமே திரும்ப திரும்ப கேட்டிருக்கிறோம். ஆனால், சாவித்திரி மிஸ்ஸின் நட்பு அம்மாவை மிகவும் உற்சாகமானவளாக மாற்றியது. தன்னுடைய முதல் உண்மையான நட்பு என்று சொல்லி சொல்லி பூரித்துப் போவாள். முதன் முதலில் அம்மா குறிப்பெடுத்துக் கொண்டு வந்த தொலைபேசி எண் சாவித்திரி மிஸ்ஸூடையது தான். இந்த நட்பின், சாவித்திரி மிஸ்ஸூடைய பக்கமும் எனக்கு மெதுவாக தெரிய வந்தது. என் வகுப்பிற்கு வந்த போதெல்லாம், நான் அமர்ந்திருக்கும் பக்கமாகவே நடந்து செல்வாள். நான் யாருடனாவது குசுகுசுத்தாள், என்னைப் பார்த்து ஒரு புன் சிரிப்பு சிரிப்பாள். பாடல்கள் சொல்லி தரும் போதும், அவ்வப்போது என் பக்கம் ஒரு கண் வரும். இதை முதலில் நான் என் கற்பனை என்று தான் நினைத்தேன். ஆனால், ஒரு நாள் அம்மா வந்து, ‘இன்னிக்கு பஜனை வேணும்னே தப்பா பாடினயாமே? சாவித்திரி சொல்லி சொல்லி சிரிச்சா’, என்றாள். பின், நானும் மிஸ்ஸை கவனிக்க ஆரம்பித்தேன். ஸ்போர்ட்ஸ் டே, குழந்தைகள் தினம் போன்ற நிகழ்ச்சிகளில், என்னையும் குழு பாடல்களில் சேர்த்துக் கொண்டாள்.
 
பின், ஒரு நாள் அம்மா என்னையும் அக்காவையும், தானே தனியாக சங்ககிரிக்கு சாவித்திரி மிஸ் வீட்டிற்கு கூட்டிச் சென்றாள். அவளுக்கும், எங்கள் வயதை ஒத்த  இரு மகள்கள் இருப்பது அப்போது தான் தெரிந்தது. அம்மாக்களின் நட்பை நாங்களும் பகிர முயர்ச்சித்தோம். அவர்கள் எங்களுக்கு தங்கள் சைக்கிளை ஓட்ட தந்தார்கள். கையில் மெஹந்தி போட்டுவிட்டார்கள். அதே போல அவர்களையும் ஒரு நாள் அம்மா வீடிற்கு அழைத்தாள். அம்மாவும் சாவித்திரி மிஸ்ஸும் எங்களை சினிமா அழைத்துபோக திட்டமிட்டார்கள். அருகில் இருந்த பழைய தியேட்டருக்கு, எல்லோருமாக ஆட்டோவில் சென்றோம். அங்கு அஜித்தின் ‘தீனா’ படம் ஓடிக்கொண்டிருந்தது.சிக்கனமாக இருக்க நினைத்தோ என்னவோ, இரண்டாம் தள டிக்கெட் எடுத்தார்கள். உள்ளே நுழைந்த போது, முதல் தளத்திற்கும் இரண்டாம் தளத்திற்கும் பெரிய வேறுபாடில்லை என்று தெரிந்தது. நான், படத்தை அத்தனை அருகில் அமர்ந்து பார்த்தது அதுவே முதல் முறை. சண்டைகளின் சத்தம் காதில் அறைந்தது. பற்றாக்குறைக்கு, எல்லா பக்கங்களிலிருந்தும் எங்களை சூழ்ந்திருந்தது, சிகரட் புகை. எங்களால், பாதி படம் வரைக் கூட அமர்ந்திருக்க முடியவில்லை. படம் இடைவேளையின் போது அழுதுபிடித்து எழுந்து வந்துவிட்டோம். ‘என்னம்மா சினிமாக்கு கூட்டிண்டு வந்த!’, என்று ஒரே புலம்பல். அதிலும் சாவித்திரி மிஸ்ஸின் சின்ன பெண்ணிற்கு வருத்தம்தான். என்றாலும் தான் அஜித்தின் முழுபடமும் பார்த்துவிட்டதாகவே மறு நாள் பள்ளிக்கு சென்று சொல்லிக்கொள்ளப் போவதாக சொன்னாள். அப்படியும், அம்மாவிற்கும் சாவித்திரி மிஸ்ஸுக்கும் ஏக மகிழ்ச்சி தான். சிரித்துக் கொண்டே வந்தார்கள்.
 
பின், சாவித்திரி மிஸ் ஊர் மாறி சென்ற பிறகும் அம்மா நினைத்து நினைத்து சொல்லியிருக்கிறாள், அது அவள் வாழ்க்கையின் சாதனைகளில் ஒன்று என.

by atomhouse at April 17, 2012 08:25 AM

April 16, 2012

Subramani - 2007

kanniyakumari-jayamohan

தனது அடுத்த படத்தின் கதை விவாதத்திற்காக கன்னியாகுமரி வந்த இயக்குநர் ரவி, தற்செயலாக அவனது இளமைக்கால காதலி விமலாவை ஒரு வெள்ளைக்காரனுடன் பார்க்க நேரிடுகிறது. முதன் முதலாக விமலாவை சந்தித்த நாள், கன்னியாகுமரியில் நடந்த அந்த விபத்து, அந்த விபத்திற்கு பின் விரிசல் விழுந்து உடைந்து போன அவர்களது காதல் என்று நினைவலைகள் ஒவ்வொன்றாக அவனுக்குள் மோதிச் செல்கின்றன. தன்னை அவளிடம், ஒரு வெற்றியாளனாக, அவளை விட அழகான, சிறந்த மனைவியை அடைந்தவனாக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறான். விமலாவை சந்திக்கும் போது, தனது ஆசை நாயகி பிரவீணாவை தன் மனைவி என்று அறிமுகப்படுத்துகிறான். ‘வெள்ளைக்காரனுக்கும் உங்களுக்கான உறவு?, அந்த விபத்திலிருந்து எப்படி மீண்டிங்க?, இவர் மேல கோபம் வரலியா?’, என்று பிரவீணா கேட்கும் கேள்விகளுக்கு விமலா சொல்லும் பதில்கள், அவளை மேலும் பல படிகள் உயரே எடுத்துச் செல்கின்றன;ரவிக்கு விமலா மீதான வெறுப்பை அதிகரிக்கின்றன. எப்படியாவது விமலாவைத் தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பெத்தெல்புரம் ஸ்டீபனை அழைத்து வருகிறான், ரவி. அந்த திட்டமும் தோல்வி அடைய, பிரவீணாவும் அவனை விட்டு சென்று விட, ரவி ஒரு வெறுமையை உணர்வதுடன் முடிகிறது ‘கன்னியாகுமரி’.

‘கற்பனை எதிரியோட சண்டை போட ஆரம்பிச்சா முடிவே இல்லை.’ என்று சொல்லும் பிரவீணாவும், ‘குற்ற உணர்வு இல்லாம நாம செய்றது எல்லாமே ஒழுக்கமான விஷயம்தான்’ என்று சொல்லும் விமலாவும் சிந்திக்க வைக்கிறார்கள். ரவிக்கும் பிரவீணாவுக்கும் இடையேயான உரையாடல்கள் அருமை. ‘அந்த காலத்திலே …’ என்று அவ்வப்போது அனுபவங்களை அள்ளி வீசும் புரடக்ஷன் மேனஜர் நாராயணன், ‘ஏகயாய ராஜகுமாரி’ ஷைலஜா, ரவியின் மனைவி ரமணி, ரவியுடன் கதை விவாதத்திற்கு வந்திருந்த வேணு கோபால், ரவியின் குருநாதர் ஜார்ஜ் எனப் பலரும், கன்னியாகுமரியின் கடலலைகளில் நாம் பயணிக்கத் துணையாக இருக்கின்றார்கள்.

ஜெயமோகனின் ‘கன்னியாகுமரி’ – ஒரு மிடறு விடமும், அமுதமும்.


by rsubramani at April 16, 2012 04:46 AM


Powered by: Planet
Last updated:May 17, 2012 06:30 PM UTC
If you are associated with TCE and like to get added here, email your details to stylesen [at_no_spam] gmail [dot] com