Planet TCEbeta

January 25, 2012

Gautham - 2011

The Crow

There was a crow which wanted to fly
Just to fly, To soar up in the sky
And stay there for a while,
Looking at the wind smile.

One day, on yet another random whim,
The wind just picked up him
And together they were
Just together, they were.

Crow

And for a while, the crow just flew
through sunshine, moonlight and fresh dew
But some part of him always knew
Things were too good to be true.

Then one day the wind asked him why
But all the crow knew was to fly
What could he tell if asked why.

A million dreams, a thousand hopes
The crow did not desire.
All he wanted was a smile here, a glimpse there.
And All he wanted was to just fly.

Would the wind have stayed if he said why
Was he good enough forever, And if so,
How far would he go, How far could he go
Before realizing he was sure he couldn’t be sure.

In the end, because he couldn’t tell why
And because he couldn’t lie.
He couldn’t even cry. He just had to fall down and die.
Just because, he wanted to fly and see her smile.

Crow Breakfast – Courtesy Alex Hutch

25th January, 2012.
Gautham.

by gautham at January 25, 2012 05:36 AM

January 23, 2012

Subramani - 2007

avvulagam

த்ரிவிக்ரமன் கேள்விப்பட்ட முதல் மரணத்திலிருந்து ஆரம்பிக்கிறது அவ்வுலகம். கற்பனைகளில் அவர் கண்ட சாமியைக் கல்லாகக் கண்டதும் ‘எல்லாக் கற்பனைகளுமே பொடிப் பொடியாகிற நிகழ்வுகளின் தொகுப்பு தான் வாழ்க்கை’ என்பது புரியத் துவங்குகிறது. பல புதிய உலகங்களை விக்ரமனுக்கு அறிமுகப்படுத்திய காளிதாஸ் மரணத்தை ஏற்றுக் கொண்ட விதம், அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. தனது கடைசி சடங்குகளை எப்படி செய்ய வேண்டும், என்று சுக்கிரனிடம் சொல்லி விட்டு, சில நாட்களிலேயே அவ்வுலகம் செல்கிறார் த்ரிவிக்ரமன். மரணத்தை வரவேற்று ஏற்றுக் கொண்டதால் அவ்வுலகில் அவருக்கு சில சலுகைகள் வழங்கப்படுகின்றன. அங்கு அவர் தான் பார்க்கவே கூடாது என நினைத்த சிலரையும், மீண்டும் என்றாவது ஒருநாள் பார்க்க மாட்டாமோ என பார்க்க ஏங்கும் சிலரையும் பார்க்கிறார். அந்த பிம்பங்கள் அவருக்கு இறந்த காலத்தையும், அப்போது அவர் இழந்ததையும் நினைவுபடுத்துகின்றன. ஒவ்வொரு பிம்பத்துடன் அவர் உரையாடி விட்டு செல்லும் போதும் அவர் மனத்திலிருந்த அழுக்குகள் ஒவ்வொன்றாக வெளியேறுகின்றன. ‘பூலோக வாழ்வை எவ்வளவு எளிதாக வீணடித்து விடுகிறோம்’ என்பதை ஒவ்வொரு பிம்பத்தின் வாயிலாகவும் நம் கண் முன் நிறுத்தி, சிந்திக்க வைக்கிறார் வெ.இறையன்பு.

அவ்வுலகப் பயணத்தின் போது மனதில் பதிந்த பொன்மொழிகள்

  • ஒப்பிடாத வரை உன் வாழ்வு சொர்க்கம்.
  • நினைவுகளின் தொகுப்பே வாழ்வின் விரிவாக்கம்.
  • எந்த உயர்ந்த விஷயமும் கேள்விக்குள்ளாக்கப்படலாம்.
  • நம்பிக்கைகள் எல்லாமே ஒருவகையில் மூடநம்பிக்கைகளே.

அவ்வுலகம் – இறப்புக்குப் பின் தொடரும் இறந்த காலம்…


by rsubramani at January 23, 2012 07:31 PM

January 16, 2012

Senthil Kumaran S - 2007

senthilkumaran

Ting!!! Ting !!! The little disturbance amidst "Asku Laska" forced me to switch tabs in my firefox and open the gtalk window. Knew, it would be one among the very few privileged people and it was. Had adorned the cloak of invisibility in gtalk, since i felt that it was disturbing my bug fixing rate, the rate at which i find which variable should be set to 0/1 or which if loop needs an extra condition to fix the high priority bug in the C code. The restriction in Gtalk was one among the self imposed restrictions. Anyway the productivity remained constant, as mind found ways and indulged in other activities, while the friendly chats vanished altogether. Anyway back to the conversation windows, it was my close friend Mr.X who had pinged.

me: not sleeping ?
time should be around 1 ?
X: 12:40
X: back to form after long time..
:)
me: he he he he :)
so how is life going ?
X: nowadays its ok.. not much work too. may be damager has to come..
next week sangoodhuradhukune vandhuruvan..
but poor thing is ur qn was how is life.. and i am answering about work..:(
me: ha ha ha…
yeah sad part..

LOL, I would have given the same reply if somebody had asked me about my "life". From that day started cautiously noticing response of people around me for the question "How is life" and it is the same. It starts with what they are working on, the work load, their manager (most of them simply called as moron), how long they stay in office etc etc etc. One thing to feel happy about is, everybody is on the same boat :)

If not work, what is this life all about ? How should we go about living it ? That is one scary question to ask anyone. Because everybody have their opinion about it and the scary part is most of them will try to thrust it down your throat.
P.S. Anyway, this conversation prevented me from deactivating my Facebook account, which i thought was taking up a lot of time.


by senthilkumaran at January 16, 2012 07:15 PM

January 15, 2012

stylesen - 2006

My OpenSource book in Tamil

OpenSource book wrapperI wrote a book on OpenSource in Tamil and it got published by New Horizon Media (Kizhakku Pathipagam) on last Saturday ie., 07-jan-2012 in Chennai Book Fair 2012. If you get a chance to visit Chennai Book fair drop in at Kizhakku Pathipagam stall and grab a copy of the book
(shortly the book will be available in http://www.nhm.in/ online store).

An introduction about this book is available here - http://www.tamilpaper.net/?p=5347

by stylesen at January 15, 2012 09:43 AM

January 12, 2012

Subramani - 2007

rsubramani

மின்னலுக்கு
முன்னறிவிப்பு,
அவள் வருகையை
இடித் திசைக்கின்றன
வெண்கொலுசுகள்.


by rsubramani at January 12, 2012 09:13 AM

January 02, 2012

Mangaiyarkarasi - 2009

мαηgαι

   விலங்குகளை விளங்குவோமா ~ 1!

   டுத்த  நாள் படகு சவாரிக்கு ஆயத்தமானோம்….(JLR resorts)விடுதி மேலாளர் எங்களிடம் இங்கு உங்களுக்கு அதிர்ஷ்டமென்றால் சிறுத்தைகளை மற்றும் புலிகளை காணமுடியும் என்றார்.நான் அப்பாவியாய் பன்னர்கட்டா   ஜூவில் நிறைய புலிகள் பார்த்திருக்கிறேன்,வெள்ளைப்புலிகள் கூட பார்த்திருக்கிறேன் என்று சொல்ல ,அவர் முகத்தில் கோபம் படர்ந்தது :D .ஆம் கூண்டில் அடைத்து ரோட்டி துண்டு போல் மாமிசம் கொடுத்து வளர்க்கப்படும்  புலிகளுக்கும்,காட்டில் டெர்ரராய் விலங்குகளை வேட்டையாடி வாழும்  புலிக்கும் வித்தியாசம் உண்டுதான் !

அந்த விடுதி முன்னொரு காலத்தில்   வேட்டையாடுவதற்கு மைசூர் மகாராஜா தங்கியிருக்கும் இடமாம் . கபினி அணைக்கட்டின்  ஆற்றேரக்குட்டை(backwaters) கரையில்  விடுதி அமைந்திருந்தது .இந்த மூன்று மணி நேரப் பயணம் தரப்போகும் அனுபவங்களை எதிர்நோக்கி சூரிய உதயத்திற்கு முன் படகில் சில வெளிநாட்டு பயணிகளும் ஒரு கைடுமாக(guide) அமர்ந்தோம். அந்த கைடுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு மறக்கமுடியாத நினைவுதான்.இந்த காட்டுபகுதியில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் ஏராளம் ஏராளம்.அதில் கண்ணில் படும் சொற்ப காட்சிகளும் நமக்கு தரும் ஆச்சிர்யத்திற்கும் பிரமிப்புக்கும் ஈடு இணையே இல்லை. national geography,animal planet,discovery channel பிரியர்கள் நிச்சயம் சபாரியை(safari) (இழக்கக் கூடாது. ​

குளிரில் நடுங்கும் காட்டிற்கு கதகதப்பு தருவதற்காக இயற்கை அன்னை சூரியனை மூட்டிவிட்டது போன்று,மெதுவாய் சூரியன் எழுந்து கொண்டிருந்தது .. அங்கு அந்த நீரில் இருந்த சில இறந்த மரங்களில் (dead woods)பறவைகளும் குளிர்காய வந்திருந்தன ………. நாங்களும்​ பக்கத்தில் தெரியும் கிராமத்தின் கொல்லைப்புறத்தையும் ,கபினி  கரையோரத்தில் இருக்கும் மற்ற விடுதிகளையும் பார்த்து கொண்டே எழில் மிகுந்த மரங்களையும்,வரிவரியாய் அசைந்து செல்லும் நீரழைகளையும் ரசித்துக்கொண்டு வந்துகொண்டிருந்தோம்.

கரையோரத்தில் சில மயில்களும்,பறவைகளும்,காட்டுப்பன்றிகளும்  மேய்ந்து கொண்டிருந்தன.நேற்று பார்த்த ஹனுமார் லண்கூர்களும்,கட்டைவிரலை விட சிறிய பறவைகளும் ஆங்காங்கே மரங்களில் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தன. இங்கேயும் விலங்குகளும் ,பறவைகளும் அவரவர் நிறங்களுக்கு ஒத்த மரங்களுக்கருகே    மேய்ந்துகொண்டிருந்தன.

திடீரென்று அந்த கைடு  அனைவருயும் அமைதியாக இருக்க சொல்லி எச்சரித்தார். நாங்களும் ஆவலாய் பார்க்க ..உயிருக்கு பயந்து ஒரு சிறிய மான் நடு தண்ணீரில் வேகமாய் நீந்தி மறுகரைக்கு சென்றுகொண்டிருந்தது.அதன் கண்களிலும் ,அசைவிலும் தெரிந்த உயிர் பயம் எங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது .

அங்கே சுமார் ஆறேழு காட்டு நாய்கள் தங்கள் உணவுக்காக இந்த மானைத் துரத்திக் கொண்டிருப்பதை அறிந்து கொண்டோம் . இந்த காட்டு நாய்கள் ,சாதாரமானவை அல்ல சிறுத்தைகளுக்கே  சவால் விடக்கூடியவை…குரைக்குற நாய் கடிக்காது என்று அறிந்திருப்போம்..ஆனால் இந்த நாய்களுக்கு குரைக்கத்  தெரியாது..ஏதோ பறவைகள் போல் கத்திக்கொண்டிருக்கின்றன.கூட்டு முயற்சிக்கும் ,அசாதாரமான வேட்டை வியூகங்களுக்கும் பெயர் பெற்றவை…அதனால் தான் ‘சிங்குளாய் (single) வரும் சிறுத்தைகளுக்கு’ கூட நாம் பயப்பட தேவை இல்லையாம்.ஆனால் இவை ஓரணியாய் திரண்டு,இரையை கலங்கடித்து வேட்டையாடுமாம்.அதன் ஒற்றுமை உணர்வும் ,குடும்ப பாசமும்  :p முதல் நாள் குறும்படத்தில் காட்டப்பட்டது…அதை நேரிலும் கண்டுவிட்டோம் ..


அவை கரையில் இருந்து கொண்டே நீரில் இருக்கும் மானைத் தொடர்ந்தன…நாங்கள் திரும்பி வரும்பொழு மான் இந்த கரை சேர்ந்திருந்தது..ஆனால் நிச்சயம் காட்டு நாய்களுக்கு தான் வெற்றி  என்று உறுதியாகக் கூறலாம்.

மேலும் தொடரும் பொழுது பல வெளிநாட்டுப்ப பறவைகள் கூட்டம் கூட்டமாய்  குடும்பம்​ நடத்திக்கொண்டிருந்தன …எங்களையும் கண்டுகொள்ளவில்லை ..அவை அமைந்திருந்த தோரணை நம்மை நகைக்க வைத்தது..கார்டூன் நெட்வொர்க்கில் வரும் பறவைக் கதாபாதிரங்களைநினைவூட்டியது…நாங்கள் நகைப்புடனே நகர்ந்தோம் ….

​அங்கு ஒரு முதலை கரையோரம் இளைப்பாரிக்கொண்டிருன்தது ….மான் இதனுடன் மாட்டி இருந்தால் என்னாகி இருக்கும் என்று நான் யோசித்து கொண்டிருக்கும் வேளையில்..படகில் ஒருத்தர் நிறைய ஹாலிவூட் படம் பார்ப்பவர் போல…முதலைகள் கூட்டமாய் தானே இருக்கும்…நம் படகை அப்படியே கவிழத்தால் என்னாவது என்பதுபோல் கேள்வி எழுப்பினார். அங்கு நான் கவனித்த பிளாஸ்டிக் காகிதங்கள்….அவை நமக்கு எதிரி அல்ல..நாம் தான் அவைகளைத் தொல்லைப் படுத்திக் கொண்டிருக்கின்றோம் என்று தோன்றியது .

திடீரென்று ரத்த கறைகளுடன் சில உதிர்ந் இறகுகள் மிதந்து கொண்டிருந்தன .ஏதோ விபரீதம் அருகே நடந்து கொண்டிருப்பதை உணர்ந்தோம்…சற்றே மேலே பார்த்தால் (மேலே இடது முதல் படம் ) மஞ்சள் கண் வில்லன் பறவை , மற்றொரு பறவையை அன்றைய காலை உணவாய் சாப்பிட்டுக்கொண்டிருந்தது….அடுத்த ஜென்மத்தில் சுதந்திர பறவையாய் பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட்டேன் !:o

எங்களைப் பார்த்தவுடன் ‘நிம்மதியா சாப்பிட கூட விட மாட்றாங்க,நம் பாட்டுக்கு தனியா இங்க வந்தா கருப்பா ஏதோ வச்சிட்டு (DSLR camera)நம்மளைப் பார்த்துட்டு இருக்காங்க..விவஸ்தை இல்லா மனிதர்கள் என்று நினைத்து போல் பறந்து சென்றது ‘.

ஒரு நல்ல சாட்(shot) மிஸ் ஆகிடுச்சே என்று உச்சு கொட்டியவாறு ,அடுத்து ஏதாவது காட்சி கிடைக்குமா என்று திரும்பினோம் .இந்த வேளையில் எனது காமெராவில் சார்ஜு (battery charge)குறைந்து விட்டடது ……:( இன்னும் சில அருமையான பறவைக் கூட்டங்களை  காமெரா துணையில்லாமல் ரசித்துக்கொண்டே வர சூரியன் உச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது …மூன்று மணி நேர மணித்துளிகள் கடந்ததே தெரியவில்லை …….
கரை திரும்பினோம்.
காடுகளைப் பற்றிய  பிரமிப்பையும்…விலங்கினத்தின் பெருமைகளையும் எடுத்து சொன்ன தோடு மட்டுமல்லாமல்  மீண்டும் இன்னொரு சபாரி(safari) எப்பொழுது செல்வோம் என்ற ஆவலயும் தூண்டியது… இதோ அதன் தாக்கம் தான் இந்த பதிவு!​

© Copyrights photos MangaiMano


by мαηgαιMano at January 02, 2012 10:36 AM


Powered by: Planet
Last updated:January 27, 2012 06:30 PM UTC
If you are associated with TCE and like to get added here, email your details to stylesen [at_no_spam] gmail [dot] com